Tuesday, July 26, 2016

கம்ப்யூட்டரில் இருந்து வெளிவரும் கெடுதலான கதிர் வீச்சிலிருந்து காக்கும் ஒரு கல்...!

அமிதிஸ்ட் 

இந்த கல்லை பற்றி ஏற்கனவே  கொஞ்சம் அறிந்து  கொண்டோம். அமிதிஸ்ட் கற்களில் இருந்து வெளிவரும்  கதிர்கள் பல நன்மைகள் செய்கிறது. மேலும் இந்த கல்லை பற்றி சொல்ல பல விஷயங்கள்  உள்ளன. அவற்றையெல்லாம் பின் வரும் பதிவுகளில் மீண்டும் காண்போம். இப்போது  அமிதிஸ்ட்  பற்றி  ஒரு  தகவல். அமிதிஸ்ட் கற்களில் இருந்து வெளிப்படும் கதிர்கள் கணினியில் இருந்து வெளிவரும்  கெடுதலான கதிர்களை தடுத்து விடுகின்றன.  அதாவது  word processor  என்னும் கம்ப்யூட்டர்  கருவிகளை  பயன் படுத்துபவர்கள் ஒரு  சிறிய   அமிதிஸ்ட்  கல்லை VDU ஸ்கிரீனில் வைத்துவிட்டால் போதும் கணினி யில் இருந்து வெளிவரும்  கெடுதலான கதிர்களில் இருந்து காத்து கொள்ளலாம்.

Tuesday, August 4, 2015

நவரத்தின நகைகள் அணிவதன் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள்!!



வெள்ளி, தங்கம், நவரத்தினங்கள் போன்றவை வெறும் ஆடம்பரம், பகட்டை வெளிப்படுத்துவது இல்லை. ஒவ்வொரு ஆபரணமும், அதில் பதிக்கப்படும் கற்களும் மனிதர்களுக்கு உடல்நலத்தை மேம்படுத்த உதவுகிறதாம். உதாரணமாக கூற வேண்டுமானால், தங்கம் உங்களது உடல் வலியை குறைக்கவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், மேம்படுத்தும் தன்மை கொண்டது. நவரத்தின கற்கள் ஒவ்வொன்றுக்கும், மனதையும், உடலையும் இலகுவாக்கும் தன்மை உள்ளதாம். ஆனால், இது கால போக்கில் உண்மை கரைந்து, போலி ஊடுருவி மக்களை மோசடி செய்யும் வியாபாரமாக மாறியிருக்கிறது.... இனி, நகை மற்றும் நவரத்தினம் அணிவதால் ஏற்படும் உடல்நல நன்மைகள் குறித்து பார்க்கலாம்...

ராசி - ராசிக்கல்



ராசி கற்கள் என்பது இன்றைய காலத்தில் பலரது நம்பிக்கையாகி வருகிறது. சரியான ராசி கல்லை நாம் அணிவதன் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் மட்டுமல்ல ஏற்றங்களும் நிகழும்.  ராசிக்கல் நமது உடலையும் மனதையும் நமது ராசி கிரகத்துக்கு ஏற்ப ஒருங்கிணைக்க வைத்து நமக்கு நன்மைகள் ஏற்படுத்துவதாக வேதங்கள் சொல்லுகின்றன. ஆனால் ராசிக்கல்லை தேர்ந்தெடுப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.  எந்தெந்த ராசி காரர்களுக்கு எந்தெந்த ராசி கல் பொருத்தமாக இருக்கும் என்பது முக்கியமான ஒன்று. நமது ராசிக்கு பொருத்தமில்லாத ராசி கல்லை நாம் அணிவதன் மூலம் நன்மைகள் நடக்காதது மட்டுமல்ல சிலசமயம் சில ஆபத்தான விளைவுகளைக் கூட தப்பான ராசிக் கல் ஏற்படுத்தலாம். ஆகவே  நமது பிறப்பு ராசியைப் பொறுத்து சரியான ராசிக் கல்லை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். எந்தெந்த ராசிக்கு எந்தெந்த ராசிக் கற்கள் பொருத்தமானவை என்று இப்போது பார்ப்போம்…

மேஷம் – பவளம்:
மேஷராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும். பவளம்(Precious coral அல்லது red coral) என்பது கோரல்லியம் ரூப்ரம் (Corallium rubrum) என்ற உயிரினத்தின் பொதுப் பெயராகும். இதன் வெளிப்புற ஓட்டின் அடர் சிவப்பு அல்லது வெளிர் சிவப்பு நிறமே இதன் தனித்தன்மையாகும். பவளம்  ஒரு நவரத்தினம். இது நகைகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது.
ரிஷபம் – வைரம் (Diamond):
ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம் இதை அணிந்தால் மகிழ்ச்சியையும் யோகத்தையும் வசீகரத்தையும் கொடுக்கும். வைரம் அல்லது Diamond மிக பிரபலமான ராசி கல்.
மிதுனம் – மரகதம்:
மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது. எமரல்ட் (emerald) என்ற ஆங்கிலப் பெயர் பச்சை நிறம் என்ற பொருள்படும் மரகதம் .
கடகம் – முத்து:
கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இது அமைதியும் மகிழ்ச்சியும் செல்வ விருத்தியும் அளிக்க வல்லது. முத்து அல்லது Pearl  ஒரு பரவலாக பயன்படுத்தப்படும் ராசிக் கல்லாகும்.
சிம்மம் – மாணிக்கம் (Ruby):
சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம்.
கன்னி – மரகதம்:
கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும் அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது.
துலாம் – வைரம் (Diamond):
துலாம் – வைரம் (Diamond) துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இதை அணிந்தால் மகிழ்ச்சியையும், யோகத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.
விருச்சிகம் – பவளம்:
விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.
தனுசு – கனக புஷ்பராகம். (Yellow Shappire):
தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும் செல்வ விருத்தியையும் கொடுக்கும்.
மகரம் – நீலக்கல் (Blue Shappire):
மகர ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது
கும்பம் – நீலக்கல் (Blue Shappire):
கும்ப ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது
மீனம் – கனக புஷ்பராகம். (Yellow Shappire) :
மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்.

நவரத்தினக்கள்- மாற்று கற்கள்

நவரத்தினக்கள்மாற்று கற்கள் உலோகம் பொறுத்தமான விரல்
மாணிக்கம் SUN STONEதங்கம் மோதிரவிரல் 
RUBY (சூரியன் )STAR RUBYசெம்பு 
RED TOPAZ
GARNET
CARBUNCLE STONE
பவளம்CORALசெம்பு மோதிரவிரல் 
CORAL (செவ்வாய்)BLOOD STONEதங்கம் சுண்டுவிரல் 
RED OPALவெள்ளி 
முத்துMOON STONEதங்கம் மோதிரவிரல் 
PEARL (சந்திரன்)WHITE OPALவெள்ளி ஆள்காட்டிவிரல் 
GREEN OPAL
மரகதம்GREEN OPALதங்கம் மோதிரவிரல் 
EMERALD (புதன்)BERYL STONEவெள்ளி சுண்டுவிரல் 
PERRIDOT STONE
GREEN ZIRCON
JADE
GREEN AGADE
கனக புஷ்பராகம்AMETHYSTதங்கம் ஆள்காட்டிவிரல் 
YELLOW SAPHIRE (குரு )OPAL
YELLOW ZIRCON
CITRINE
நீலக்கல்LABRADIRTEதங்கம் நடுவிரல் 
BLUE SAPHIRE (சனி)AQUVAMERINEவெள்ளி 
LAPIS LAZULL
TORQUOISE
BLUE TOPAZ
வைடூரியம்PEARLதங்கம் நடுவிரல் 
CAT'S EYE (கேது)OPALவெள்ளி மோதிரவிரல் 
RAINBO MOON STONEசுண்டுவிரல் 
TIGERS EYE
கோமேதகம்GOMEDதங்கம் நடுவிரல் 
GOMETHAGAM (ராகு)வெள்ளி 

நவரத்தினங்கள் வாழ்க்கையின் பல்வேறு பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது.










புராணங்களில் ஒரு கதை உண்டு. கிருஷ்ணர் விலை மதிக்க முடியாத சமந்தக மணியை தேடி போனதாகவும், அதற்காக பெரும் யுத்தம் கூட நடந்ததாகவும் புராணங்கள் சொல்கிறது.
அது யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு தரித்திரம் என்பதே இருக்காதாம். மகாலக்ஷ்மியே அவர்களிடம் வாசம் செய்வாளாம். செல்வம் ஓடி வரும், வெற்றி தேடி வரும், வீரம் நாடிவரும்.
இது தெய்வங்களுக்கு உரியது. தேவர்களுக்கு உரியது. மனிதர்களுக்கு கிடைக்க போவதில்லை.
நாக ரத்தினம் என்றொரு ரத்தினம் உண்டு. வாலிபம் கடந்து வயோதிகம் அடைந்த நல்ல பாம்பு, தன் வாழ்நாளில் தன் விஷ பையில் இருந்து தன் விஷத்தை இழக்காமல் இருந்தால், அந்த விஷமானது நாகரெத்தினமாக மாறும் என்று சொல்லபடுகிறது.
ஆனால் இதுவரை நாகரெத்தினத்தை பார்த்தவர்களும் இல்லை. வைத்திருப்பவர்களும் இல்லை. ஆனாலும் மற்ற நவரத்தினங்கள் வாழ்க்கையின் பல்வேறு பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது.
வைரம் வாழ்க்கையில் அபரிதமான பலன்களை தரும். எதிர் மறை எண்ணக்களை போக்கும். அதிஷ்டத்தை அழைத்து வரும். மனம் தெளிவாகும். நடக்குமா. நடக்காதா, கிடைக்குமா, கிடைக்காதா, முடியுமா, முடியாதா என்பது போன்ற எதிர் மறை எண்ணங்கள் எதுவும் வராது.
மாணிக்கம் சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற்று தருகிறது. ரெத்த ஓட்டத்தை சீராக வைத்து இருக்கிறது.
மரகதம் அணிந்தால் அறிவை பிரகாசிக்க செய்யும். ஞாபக சத்தி அதிகரிக்கும். மறதி குணம், மந்த புத்தியை போக்கும். நரம்பு தொடர்பான வியாதிகளை நீக்கும்.
புஷ்பராகம் கண்பார்வையை சரி செய்யும். திடீர் அதிச்டங்களை அழைத்து வரும்.
வைடுரியம் எதிர் மறை எண்ணத்தை போக்கும். பில்லி சூன்யம் ஏவல் செய்வினை கோளாறுகள் வராமல் பாதுகாக்கும். எதிரிகளை எதிர்ப்புகளை முறியடிக்கும்.
பவழம் வீரத்தை தரும். தேக்கு மரதேகம், தினவெடுத்த தோள்கள், ஆஷானுபாகுவான உடம்பு, என்று சொல்வது மாதிரி கட்டு மஸ்தான உடலை தருகிறது.
முத்து உடல் குளிர்ச்சியை தரும். மனம் தெளிவாகும்.
நீலக்கல் கிரக தோஷத்தை போக்கும்.
கோமேதகம் உடல் வெப்பம் சீராக இருக்க காரணமாக இருக்கிறது.
ஒவ்வொரு ரெத்தினமும் ஒவ்வொரு பலன்களை தந்தாலும், அனைத்தையும் ஒருவர் அணிந்தது கொள்ள முடியாது.
அப்படி அணிந்து கொள்ள வேண்டுமானால் செவ்வாய் ஜாதகத்தில் பலமாக இருக்க வேண்டும். ஜாதகத்தில் ஆட்சி பெற்று இருக்கலாம். உச்சம் பெற்று இருக்கலாம். அல்லது மேஷ ராசியில். விருச்சிக ராசியில் இருந்தால். அல்லது பிறந்தால் மட்டுமே ஒன்பது கல் மோதிரம் அணிய முடியும்.

Monday, August 3, 2015

நவரத்தின மகிமைகள்

நவரத்தினக்கள்மாற்று கற்கள் உலோகம் பொறுத்தமான விரல்
    
    
மாணிக்கம் SUN STONEதங்கம் மோதிரவிரல் 
RUBY (சூரியன் )STAR RUBYசெம்பு  
 RED TOPAZ  
 GARNET  
 CARBUNCLE STONE  
    
பவளம்CORALசெம்பு மோதிரவிரல் 
CORAL (செவ்வாய்)BLOOD STONEதங்கம் சுண்டுவிரல் 
 RED OPALவெள்ளி  
    
முத்துMOON STONEதங்கம் மோதிரவிரல் 
PEARL (சந்திரன்)WHITE OPALவெள்ளி ஆள்காட்டிவிரல் 
 GREEN OPAL  
    
மரகதம்GREEN OPALதங்கம் மோதிரவிரல் 
EMERALD (புதன்)BERYL STONEவெள்ளி சுண்டுவிரல் 
 PERRIDOT STONE  
 GREEN ZIRCON  
 JADE  
 GREEN AGADE  
    
கனக புஷ்பராகம்AMETHYSTதங்கம் ஆள்காட்டிவிரல் 
YELLOW SAPHIRE (குரு )OPAL  
 YELLOW ZIRCON  
 CITRINE  
    
நீலக்கல்LABRADIRTEதங்கம் நடுவிரல் 
BLUE SAPHIRE (சனி)AQUVAMERINEவெள்ளி  
 LAPIS LAZULL  
 TORQUOISE  
 BLUE TOPAZ  
    
வைடூரியம்PEARLதங்கம் நடுவிரல் 
CAT'S EYE (கேது)OPALவெள்ளி மோதிரவிரல் 
 RAINBO MOON STONE சுண்டுவிரல் 
 TIGERS EYE  
    
கோமேதகம்GOMEDதங்கம் நடுவிரல் 
GOMETHAGAM (ராகு) வெள்ளி  

நவரத்தினங்கள் : 1.

உலகில் பலவகையான கற்கள் இருந்தாலும் ஒன்பது கற்கள் சிறப்பாக நவரத்தினக் கற்கள் என்று அழைக்கப்படும். அவை...

1.                  மாணிக்கம்:

இது ஆங்கிலத்தில் ரூபி (Ruby) என்றும், ஹிந்தியில் மாணிக் என்றும் அழைக்கப்படும். புராண நூல்களில் இதற்கு குருவிந்தம், பதுமராகம், ரவிமணி, ஹாரநாயகம் என்ற பெயர்களும் உண்டு. இது பூமிக்கடியிலிருந்து கிடைக்கும் கல். ரோஸ் அல்லது சிகப்பு நிறமாக ஒளி ஊடுறவும் தன்மையுடனும் அதே நேரம் முழு சிவப்பு நிறத்தில் ஒளி ஊடுறவா கல்லாக இரு விதமாகவும் கிடைக்கும்.

உயர் தர மாணிக்கங்கள் சாதரண வெளிச்சத்தில் சிகப்பு நிறத்தையும் அதிக வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரத்த சிவப்பையும் காட்டும். உலகிலேயே மிகவும் தரமான மாணிக்கம் பர்மாவிலும் அதற்கு அடுத்த நிலையில் இலங்கையிலும் கிடைக்கின்றன. இந்தியாவில் ’மைசூர் ரூபி’ என்றத் தரத்தில் சற்று குறைந்த மாணிக்கமும் கிடைக்கிறது.

மாணிக்கத்தில் உள்ள ரசாயனப் பொருள் அமோனியம்-ட்ரை-ஆக்ஸைடு ஆகும். இவைகொரண்டம் (corundum) என்கிற வகையைச் சார்ந்தவை.

மாணிக்கம், போலியாக / செயற்கையாகத் தொழிற்சாலையிலும் தயார் செய்யப் படுகிறது. ஆனால் இதில் காற்றுக் குமிழ்கள் காணப்படும். இது பொதுவாக ஒளி ஊடுறுவக் கூடியதாகவே இருக்கிறது. அமெரிக்கன் டையமண்ட் கற்களில் சிகப்பு நிறத்திலும் கற்கள் வரும். அவையும் மாணிக்கம் போலவே இருக்கும்; இவற்றை சிகப்பு ஸ்பைனல் கற்கள் என்று கூறுவர். இதை Dichroscope என்ற கருவியின் மூலம் அறியலாம்.

புற ஊதா கதிர் விளக்குச் சோதனையிலும் மாணிக்கத்தைக் கண்டறிகிறார்கள். மாணிக்கத்திற்கு நிறம் தரும் குரோமியம், குறிப்பாக பர்மா மாணிக்கங்களில் அதிகமாக, உள்ளதால் அவை புற ஊதா கதிர் விளக்குகளில் அதிகமாக ஒளிர்கின்றன.

2.                  முத்து

இதன் ஆங்கிலப் பெயர் பியர்ல் (Pearl); இந்தியில் இதன் பெயர் மோத்தி (मोति). இதன் புராதனப் பெயர் ப்ரமௌக்திகம் என்பதாகும். உலகிலேயே பட்டைத் தீட்டப் படாத அல்லது பட்டைத் தீட்ட வேண்டிய அவசியமில்லாத ரத்தின வகை ஒன்ரு உண்டெண்றால் அது முத்து தான். மற்ற ரத்தினங்கள் பட்டைத் தீட்டத் தீட்ட ஜொலிக்கும். ஆனால், முத்து ஒன்றுதான் இயற்கையிலேயே ஜொலிப்பவை. முத்து வானவில்லின் ஏழு நிறங்களையும் காட்டி ஜொலிப்பிற்கு ‘ஷீன்’ என்று பெயர். அதே நேரம் மற்ற ரத்தினங்களைப் போலல்லாமல் முத்துக்கள் சில காலத்திற்குப் பின் நிறம் மங்கத் தொடங்கி விடுகின்றன.

இதில் உள்ள ரசாயனப் பொருள் கால்சியம் கார்பனேட். இது ஆர்கானிக் ஜெம்ஸ் என்ற வகையைச் சார்ந்தது. சாதாரணமாக சிப்பிகள் அவற்றின் உள்ளே அழுக்குகள் படிந்திருந்தால் அவை தாக்காமலிருக்க வேதிப்பொருளைச் சுரந்து அந்த அழுக்கைச் சுற்றி அடுக்குகளாகப் படிந்துவிடுகின்றன. இந்த அடுக்குகள் மேலும் மேலும் இறுகி திரண்டு முத்துக்களாக மாறிவிடுகின்றன.  

செயற்கை முத்துக்களைப் பொறுத்தவரை, இந்த சிப்பிகளில் துளை செய்து அதில் வேறு சிப்பிகளின் தசைகளை வைத்து விடுவார்கள் அவற்றைச் சுற்றி இந்த வேதிப் பொருள் படிந்து அதன் மூலம் முத்துக்கள் உருவாகின்றன. ஆனாலும் இவற்றின் அடுக்குகள் இயற்கை முத்துக்களைப் போல அல்லாமல் வெங்காயத்தைப் போல ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்காக இருக்கின்றன.

3.                  புஷ்பராகம்

சாதாரணமாக இதை கனக புஷ்பராகம் அதாவது ஆங்கிலத்தில் Yellow Sapphire என்று அழைக்கப்படுகின்றன; சிலர் இதை மஞ்சள் டோபாஸ் என்றும் அழைப்பர். இதன் புராதனப் பெயர் பதுமராகம், பதுபராஜ் என்பவை ஆகும். இந்தியில் இதன் பெயர் புக்ராஜ். கொரண்டம் வகையைச் சார்ந்த இவற்றில் உள்ள வேதிப் பொருளும் அமோனியம்-ட்ரை-ஆக்ஸைடு தான். இது நிறமற்றது. ஆனால், இதனுடம் வேறு தாதுப் பொருட்கள் சேர அவற்றின் தாக்கத்தால் இவை மாணிக்கமாக அல்லது நீலம் என்று மாற்றம் பெருகின்றன. நிறம் எதுவும் சேராதது வெண்புஷ்பராகம் என்றழைக்கப் படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, ஒரிஸா மாநிலத்திலும், இலங்கை, ஆஸ்த்ரேலியாவிலும் கிடைக்கின்றன. புஷ்பராகத்தைப் போலவே மஞ்சள் டோபாஸ், மஞ்சள் பெரில் அல்லது ஹெலியோடோர் ஆகியவையும் இருக்கும்; ஆனால், இவையும் அபூர்வக் கற்களே. புஷ்பராகத்தின் போலியாகக் கருதப் படுவது சைட்ரைன் குவார்ட்ஸ் என்ற கல்லே. ஆனால், இது புஷ்பராகத்தைவிட எடைக் குறைவாக இருக்கும்.


4.                  கோமேதகம்

கோமேதகத்தின் ஆங்கில பெயர் ஹெஸோநைட் (Hessonite). ஹிந்தியிலும் இதன் பெயர் கோமேதக் தான். இதன் நிறம் பசுவின் சிறுநீரின் நிறத்தில் இருப்பதால், புராதன காலத்தின் இதை கோமூத்திரம் என்றும் அழைப்பர். இது கார்னெட் வகையைச் சார்ந்தது. இதிலுள்ள ரசாயனப் பொருள் கால்சியம் அலுமினியம் சிலிகேட். ஆரஞ்சு நிறமுடைய அமெரிக்கன் டைமண்ட் கோமேதகம் போலத்தான் இருக்கும். தேன் நிற ஜிர்க்கானைக் கோமேதகத்திற்கு போலியாகக் கூறுவர்.